உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

இராணுவத்தினர் கொலை: வவுனியாவில் இன்றும் விசாரணை

தமது தடுப்பில் இருந்த இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று பேர் தொடர்பில் இன்று இரண்டாம் நாளாகவும் விசாரணை இடம்பெறவுள்ளது.

வவுனியா மேல்நீதிமன்றத்தில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

விடுதலைப்புலிகளின் தடுப்பில் இருந்த 26 இராணுவ மற்றும் கடற்படை வீரர்களை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மூன்று பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வழக்கு விசாரணைகளுக்காக இந்த மூவரும் நேற்று அநுரதப்புர சிறைச்சாலையில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை ஆரம்பமானது.

கருத்து தெரிவிக்க