உள்நாட்டு செய்திகள்புதியவை

இந்த வருடத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் சிக்கல்!

இந்த வருட இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்ட 8 மாகாண சபைகளின் தேர்தலை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேல்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் நிலை ஏற்படும்.

இதனடிப்படையில், மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹனா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க