வெளிநாட்டு செய்திகள்

ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடி சந்திப்பு

ஜப்பான் ஒசாகா நகரத்தில் எதிர்வரும் 28-ஆம் திகதி ஆரம்பமாகும் 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவை அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கிய விவகாரம், வரி விதிப்பு பிரச்சினை, விசா விவகாரம், இரு தரப்பு இராணுவ, அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக இதன் போது விவாதிக்க படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 25-ஆம் திகதி இந்தியா வரும் நிலையில் மோடி, ட்ரம்ப் சந்திப்பின்போது பேச உள்ள விடயங்கள் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் மாநாட்டில் ஆர்ஜண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க