உள்நாட்டு செய்திகள்புதியவை

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பணிப்பகிஷ்கரிப்பு: ரயில்வே தொழிற்சங்கங்கள்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில்வே ஓட்டுநர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், கட்டுப்பாட்டு அறை மேற்பார்வையாளர், மேலாண்மை அதிகாரிகள், ரயில்வே துறையின் அதிகாரிகள் ஆகியோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட  ரயில்வே தொழிற்சங்கங்கள் 22ஆம் திகதி சனிக்கிழமையுடன் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க