உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மோரா தோட்டத்திற்கு செல்லும் பாதை பாவனைக்கு உதவாத நிலை

பொகவந்தலாவ மோரா தோட்டத்திற்கு செல்லும் பாதையானது மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் இப்பகுதி மக்கள் போக்குவரத்தின் போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக சுட்டிகாட்டுகின்றனர்.

டின்சின் சந்தியிலிருந்து மோரா தோட்டதிற்கு சுமார் ஐந்து கிமீ நீளமான இந்த பாதை 2.5 கிமீ வரை கொங்கிரீற் போடப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது.

மிகுதியான பாதை நீண்ட காலமாக சீர் செய்து தரப்படாத நிலையில் படிக்கட்டு தன்மையாக காட்சியளிக்கின்றது.

இந்த பாதையின் வாயிலாக கர்ப்பிணி தாய்மார் முதல் பாடசாலை பிள்ளைகள் வரை பயணிக்க வேண்டியுள்ளதாகவும் பாதை சீரின்மையால் குறித்த நேரத்தில் தமது பணிகளை தொடர வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக கருத்து தெரிவித்த வாகன சாரதிகள் இந்த பாதையாக படிக்கட்டு தன்மையாக காணப்படுவதால் தமது வாகனங்கள் விரைவாக பழுதடைந்து விடுவதாகவும் கூடுதலான எரிபொருள் விரையமாவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க