உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை தமிழர்களின் பிரஜாவுரிமை விண்ணப்பங்களை ஏற்குமாறு உத்தரவு

இந்தியாவில் வசிக்கும் 65 இலங்கை தமிழர்கள் இந்திய பிரஜாவுரிமைக்காக புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சென்னை மேல்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விண்ணப்பங்களை தாமதிக்காது மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டும் என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மாவட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழ்நிலைகளை அடுத்து தமிழகத்துக்கு தப்பிச்சென்ற பெருந்தோட்டப்பகுதிகளை சேர்ந்த இந்திய வம்சாவளிகளான 65பேரே தமக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் திருச்சி கோட்டப்பாடு இடைத்தங்கல் முகாமில் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கையின் வடக்குகிழக்கு அகதி மக்களைப் போன்று தம்மை கருத்திற்கொள்ளாமல்,தம்மை இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்ற வகுதிக்குள் வைத்து பார்க்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க