உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வீதிகளை படையினர் விடுவிக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை

10 வருடங்களுக்கு மேலாக படையினர் தடைசெய்து வைத்திருக்கும் களப்பு மற்றும் ஆழ்கடலுக்கு செல்லும் இரண்டு வீதிகளை படையினர் விடுவிக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டுவாகல் பகுதியில் இருந்து களப்பு மற்றும் பெருங்கடலுக்கு மீனவர்கள் செல்லும் இரண்டு வீதிகளை கடற்படை மற்றும் தரைப்படையினர் 2009 ஆம் ஆண்டில் இருந்து தடை செய்துள்ளனர்.

இந்நிலையில் தடைசெய்யப்பட்ட குறித்த வீதிகளை படையினர் விடுவிக்கவேண்டும் என மீனவர்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டுவாகல் பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ள குறித்த இரண்டு வீதிகளை கடற்படை மற்றும் தரைப்படையினர் விடுவிக்கவேண்டும் என மக்கள் பிரதிநிதிகளிடமும் அரச அதிகரிகளிடமும் பல பல தடவைகள் முன்வைக்கப்பட்டபோதும் வீதிகள் திறக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க