வெளிநாட்டு செய்திகள்

பிரான்சில் நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள்

மேற்கு பிரான்சில் இன்று காலை 8.50 மணியளவில் ப்ரெசூவேர் நகருக்கு அருகில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பூமியதிர்வு தெற்கில் போர்டியாக்ஸ் தொடக்கம் வடக்கில் நோர்மண்டி வரை உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் பலர் இவ் அதிர்வை உணர்ந்ததால் அச்சம் அடைந்திருப்பதாகவும் , இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தேசிய நில அதிர்வு சேவை மையம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க