வடக்கு செய்திகள்

பொது அமைப்புகளுக்கு நிதி கையளிப்பு

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவினால் கம்பரெலிய திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதி 42 பொது அமைப்புகளுக்கு பத்திரங்கள் மூலம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு வவுனியா தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் 42 பொது அமைப்புகளுக்கான 113 திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர். எஸ்.தனிகாசலம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க