உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

புலிகளினால் பலவந்தமாக கல்முனை உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது: ஹரீஸ்

விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக கல்முனை உப பிரதேச செயலகம் அமைக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி குறித்த பிரதேச செயலகத்துக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் செய்த தவறுகளை மறைப்பதற்காக தற்போது குறித்த போரட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்ற தொணியிலும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களும் முஸ்லிம்களுக்கு அநீதியை இழைத்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

கருத்து தெரிவிக்க