உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆட்கடத்தல் விடயத்தில் இலங்கையை அமரிக்கா தரமிறக்கியது.

வெளிநாடுகளுக்கு மனிதக் கடத்தல் விடயத்தில் இலங்கை இன்னமும் ஆகக்குறைந்த அம்சங்களை நிறைவேற்றவில்லை என்று அமரிக்கா கூறியுள்ளது.

அமரிக்காவின் மனிதக்கடத்தல் தொடர்பான பிந்திய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதக்கடத்தல்களை தடுக்க இலங்கை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் இன்னும் ஆகக்குறைந்த அடைவு மட்டத்தைப் பெறவில்லை.

கடந்த காலங்களை போன்று மனிதக்கடத்தல்களை தடுக்கும் விடயங்களில் இலங்கை அரசாங்கம் கடந்த வருடத்தில் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

அத்துடன் கடந்த வருடத்தில் மனிதக்கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டனைகளுக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்த்தப்படவில்லை.

எனவே அமரிக்காவின் அறிக்கையில் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க