உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை காணி ஆக்கிரமிக்கப்படவில்லை

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலைக்கு உரிய காணி தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எதுவித பலனுமில்லை என்ற செய்தி ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதுமாகும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக்காணியில் 15 க்கும் மேற்பட்டோர் 25 வருடங்களாக வாழ்வாதார சுயதொழிலாக வெதுப்பாக உற்பத்தி நிலையத்தை மேற்கொண்டு வருவதோடு வெதுப்பக உற்பத்தியை நம்பி தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் மாற்றிடம் வழங்கப்பட வேண்டும். வழங்கும் பட்சத்தில் பொது நலன்கருதி கோரப்படும் காணியை வழங்கலாம் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க