உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

நாவலப்பிட்டியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவு வெஸ்டோல் தோட்டத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 59 வயதுடைய எம். ராஜன் என்பவரே இன்று (20) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே குளவிகள் கொட்டியுள்ளதுடன், பாதிப்படைந்த 7 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே இடையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனையோர் நாவலப்பிட்டி வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டு ஐவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்படுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க