உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

ஹட்டன், கினிகத்தேன பகுதியில் பாரவூர்தி குடை சாய்ந்தது

ஹட்டன், கினிகத்தேன பகுதியில் பாரவூர்தியொன்று 50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த பாரவூர்தியின் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.

டயகமயிலிருந்து 10 தொன் தேயிலை தூளை கொழும்புக்கு ஏற்றிச்சென்ற பாரவூர்தியே இவ்வாறு இன்று முற்பகல் விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த இருவரும் கினிகத்தேன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க