உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தமிழ் பிரதேசங்களில் இன்று கடையடைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரிய உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் கடையடைப்பு.
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி கல்முனையில் இடம்பெற்று வரும் உண்ணாவிரத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று மட்டக்களப்பு, திருக்கோவில் பிரதேசம் மற்றும் பொத்துவில் தமிழ் வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டு தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துமாறு மிக நீண்ட காலமாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மதகுருமாறு உட்பட பலர் உண்ணாவிரத்தினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று வியாழக்கிமை(20) அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களில் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

இவ் ஹர்த்தால் காரணமாக அம்பாறை தமிழர் பிரதேசங்களின் இயல்பு நிலைமைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்படுவதுடன் அரச நிறுவனங்கள் பாடசாலைகள் இடமபெற்று வருவதுடன் அரச பேரூந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருந்துடன் வீதிகளும் மக்கள் நடமாற்றமின்றி காணக்கூடியதாகவும் இருந்தன.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பிலும் சத்தியாக்கிரக போராட்டம் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க