வடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் சதொச கிளை திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது லங்கா சதொச கிளை இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற லங்கா சதொச கட்டடத் திறப்பு விழா நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு சதொச நிறுவனத்தினுடைய வடமாகாண முகாமையாளர் றஸ்மின் கலீல் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிறுவனத்தை சதொச நிறுவன செயற்றிட்ட முகாமையாளர் ரணசிங்க பண்டார மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலய செந்தில்நாத குருக்கள் புதுக்குடியிருப்பு சூசையப்பர் ஆலய பங்குதந்தை எஸ். சுதர்சன் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் ஜனமேஜெயந் புதுக்குடியிருப்பு இலங்கை வங்கிக் கிளை உத்தியோகத்தர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க