வெளிநாட்டு செய்திகள்

மாலியில் கொடூரம் – 41 கிராமவாசிகள் கொலை

மாலியின் மத்திய பகுதியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களுக்குள் நேற்று முன்தினம் இரவு ஆயுதம் ஏந்திய குழுக்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலினால் கங்காபானி கிராமத்தில் 17 பேர் பேரும் யோரோ கிராமத்தில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கங்காபானி கிராமத்துக்குள் நுழைந்த 100-க்கும் மேற்பட்டோர், வீடுகளுக்குள் இருந்துவர்களை வெளியே இழுத்து வந்தது, கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அத்துடன் பல வீடுகளை தீவைத்து எரிந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்திய குழுக்கள் கிராமத்தில் இருந்த ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

அண்மையில் நாட்டின் மத்திய பகுதியில், டோகான் இனத்தவர்கள் அதிகம் வாழும் சோபனே-கோவ் கிராமத்துக்குள் ஆயுதம் ஏந்திய குழுக்கள் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க