உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரித்தானியாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகின்றனர்.

பிரித்தானியாவின் முக்கிய துறைசார் பாதுகாப்பு நிபுணர்கள் உட்பட்ட மெட்ரோபொலிட்டன் காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.

இந்த வாரத்தில் இந்த பயணம் இடம்பெறும் என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரீஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான தமது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் முகமாகவே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு நிபுணர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க