வெளிநாட்டு செய்திகள்

பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்ப்

மீண்டும் ஜனாதிபதியாக்கினால் அமெரிக்காவை பலம் பொருந்திய சிறப்பான நாடாக தொடர்ந்தும் வைத்திருப்பேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ப்ளோரிடா ஒர்லாண்டோவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியாக மீண்டும் போட்டியிடவுள்ளதாக முறைப்படி அறிவித்தததை தொடர்ந்து ஜனாதிபதி ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் தமது தொடரும் சேவைகள் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவை பலம் பொருந்திய சிறப்பான நாடாக தொடர்ந்தும் வைத்திருப்பேன்.

கடந்த 2½ஆண்டுகளில் சிறந்த சேவை வழங்கியுள்ளோம். அமெரிக்காவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை உலக நாடுகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது.

அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்கிற கொள்கையில் நான் தீர்க்கமாக இருக்கிறேன்.

குடியரசு கட்சியினர் நாட்டில் சோசலிசத்தை திணிக்க நினைக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி ட்ரம்ப் இதன் போது தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க