உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் ஹப்புத்தளை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு.

ஹப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.

பாடசாலையின் அதிபர் என் சந்திரமோகன், மனநல வைத்தியர் – இமாலி நாணயக்கார, மதுவரி திணைக்கள அதிகாரி தென்னக்கோன், ஹப்புத்தளை உதவிக்காவல்துறை அதிகாரி உபாலி தலகல, ஹப்புத்தளை காவல்துறை அதிகாரி சாஹர தயாரத்ன ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது போதைப்பொருளின் தாக்கம் சமூகத்தில் செலுத்தும் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.


அத்துடன் நிகழ்வை முன்னிட்டு மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டது.

கருத்து தெரிவிக்க