உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

துப்பாக்கியைக் காட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளையிட்டவர் கைது

மொரகஹஹேன பிரதேசத்தில் துப்பாக்கியைக் காட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் பயகலை என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பாணந்துரை பிரிவு சட்டஒழுங்கு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியொன்றும், 9 மில்லி மீற்றர் ரவைகள் நான்கு மற்றும் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க