வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு- ஐவர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வைத்தியசாலை ஒன்றில் இரண்டு இனக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாகா ‌‌ஷக் என்ற கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல் வெடித்ததில், இருதரப்பையும் சேர்ந்த பலர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்க வந்த நிலையில் மீண்டும் அக் குழுக்களிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் சம்பவ இடத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் குறித்த வைத்தியசாலையில் பதற்றமான சூழல் உருவானது.

இதனையடுத்து வைத்தியசாலையை பொலிஸார் சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

கருத்து தெரிவிக்க