உள்நாட்டு செய்திகள்புதியவை

மூன்று முஸ்லின் அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இரண்டு குழுக்கள்!

முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளை உள்ளடக்கிய இரு குழுக்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் ரிஷாட் உள்ளிட்டோருக்கு எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து சாட்சிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க