உள்நாட்டு செய்திகள்புதியவை

ஈஸ்டர் தாக்குதல் – தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தகவல் பதிவில் இணைப்பு

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களுக்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட 3 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு தகவல் பதிவில் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் கோயம்புத்தூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது மொஹமட் ஹுசைன் சாஜஹான் மற்றும் ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மூவரும் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் கவரப்பட்டவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல்கள் குறித்து அவர்களுக்கு இடையிலும் அவர்களது நண்பர்கள் மத்தியிலும் வரவேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த மூவரும் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க