வடக்கு செய்திகள்விளையாட்டு செய்திகள்

ஒட்டுசுட்டானில் 31 ஆவது இளைஞர் விளையாட்டு விழா

வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 ஆவது தேசிய விளையாட்டு விழா இம்முறை சிறப்பாக இடம்பெற இருக்கின்றது.

இந்த விழாவில் கயிறிழுத்தல் மற்றும் கிரிக்கட் போட்டிகள் நேற்று ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றன.

நடைபெற்று முடிந்தபோட்டிகளில் பெண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகபிரிவு அணி முதலாமிடத்தையும் பெற்றிருக்கின்றது.

ஆண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகபிரிவு அணி முதலாமிடத்தையும் பெற்றிருக்கின்றது

அதேபோன்று ஆண்களுக்கான கிரிக்கட் போட்டியில் 2 ஆம் இடத்தை கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு அணியும் 1ஆம் இடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவு அணியும் பெற்றுக்கொண்டிருக்கிறது.

பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் 2 ஆம் இடத்தை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவு அணியும் 1ஆம் இடத்தினை கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு அணியும் பெற்றுக்கொண்டிருக்கிறது.

 

கருத்து தெரிவிக்க