உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரிக்கை-உண்ணாவிரதம் தொடர்கிறது

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி நேற்று காலை 9 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரை உண்ணா விரதப்போராட்டம் இன்றும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ கே.கே. சச்சிதானந்தசிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் 2வது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை மாநகர சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல் நிலையைத் தேற்றும் வகையில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் முதலுதவிச் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க