மலையகச் செய்திகள்

மொக்கா பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு

மஸ்கெலிய மொக்கா 320/Q கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 350 வறிய குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திரராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அங்கு உரையாற்றிய அவர், பெருந்தோட்ட பகுதிகளில் சமுர்த்தி உதவி திட்டம் இன்று வரை முறையாக நடைமுறை படுத்த படவில்லை.

இனிவரும் காலங்களில் இந்த சேவை பெருந்தோட்ட பகுதிகளில் முறையாக நடைமுறை படுத்த வேண்டும்.

அதற்கு அந்த பகுதியில் உள்ள சமுர்த்தி அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயல் பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர் மஸ்கெலிய பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து தோட்ட பகுதிகளிலும் இந்த சேவையை முன்னெடுக்க உள்ளதாகவும் ஒத்துழைப்பும் அவசியம் என்று மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க