உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது குறித்து சிந்திக்க தயார்!

பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து உத்தியோகபூர்வமாக கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டால் அதுகுறித்து சிந்தித்து பார்க்க தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள சமல் ராஜபக்ஷவிற்கு எமது வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்ததை அடுத்து ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டபோது தற்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் தனக்கு இதுதொடர்பில் கருத்துக்கள் எதுவும் கூறமுடியாது என தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க