உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு சபாநாயகரை சந்திக்கிறது!

நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் இன்றையதினம் சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்திக்கவுள்ளனர்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் உள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன், தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ள பல அதிகாரிகள் முன்னிலையாகாதுள்ளமை மற்றும் ஜனாதிபதியால் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க