உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோட்டாபயவிற்கு எந்த தடையும் இல்லை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு, எந்த தடையும் இல்லை என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ச எந்தப் பிரச்சினையும் இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். அமெரிக்க குடியுரிமையைத் துறக்கின்ற ஆவணங்களை அவர் பெற்றுக் கொண்டு விட்டார்.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அமெரிக்க குடியுரிமை விவகாரத்தினால் எந்தப் பிரச்சினையும் வராது” என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க