உள்நாட்டு செய்திகள்புதியவை

நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக இல்லை- சி.சிவமோகன்

நாம் அரசங்கத்துக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்ற கருத்து முற்றிலும் தவறானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கு இதுவா சந்தர்ப்பம் என ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வென்பது முடக்கப்பட்டு விட்டது. இனி தீர்வு சாத்தியமில்லையென்பது வெளிச்சமாகியுள்ளது.

இனவாதிகளால் மெல்ல மெல்ல இழுபறியாக்கப்பட்டு இறுதியில் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை இல்லாதொழித்துள்ளனர்.

தமிழர்களுக்கு எதிரானவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதை தடுக்கும் முயற்சியாகவே இதனை அனைவரும் பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமென்ற நோக்கில் தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாக கருதப்படுகின்ற நிலையில் அவர் இவ்வாறான பதிலை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க