உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

கொக்குவில் பகுதி வீடொன்றில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல்

கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியதோடு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருட்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. எனினும் வீட்டிலிருந்தவர்கள் தாக்குதலிருந்து தப்பித்துள்ளனர்.

இதேவேளை மானிப்பாய் செல்லமுத்து மைதானம் ஊடாக இன்று மாலை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வாள்களுடன் பயணிப்பதை அவதானித்த பொதுமக்கள், மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களை நேரடிப் பேச்சுக்கு வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் வன்முறைக் கும்பல் ஒன்று இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க