உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் இந்த நிலைக்கு ஐ.தே.க. தான் காரணம்: அஸ்கிரிய பீடம்

ஐக்கிய தேசிய கட்சி விட்ட பிழைகளால் தான் நாடு இந்த நிலைக்கு சென்றுள்ளது என அஸ்கிரிய பீட மாஹாநாயக்க தேரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிங்கள பௌத்த மதத்தையும்  மக்களையும் பாதுகாக்க வேண்டும். நாம் மௌனமாக இருக்கவில்லை. எம்மை சந்திக்க வந்த ஒவ்வொரு தலைவர்களிடமும் நாம் இதை கூறியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி இனி தலைதூக்க முடியாது. இது பற்றி பகிரங்கமாக கூற தான் அச்சப்படபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து தகுதியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அஸ்கிரிய மாஹாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க