உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சஹரானின் மற்றுமொரு தோழர் சிக்கினார்

தேசிய தௌய்த் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகக் கூறி 21 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள பயிற்சி முகாமில் சஹரானின் உபதேசங்களைக் கேட்க சமூகமளித்து ஆயுத பயிற்சி எடுத்து தனி முஸ்லிம் ராஜ்ஜியம் ஒன்றை அமைப்பதற்கு செயற்படுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அதன்போது டி56 ரக துப்பாக்கி பயன்படுத்துவது தொடர்பிலும் ஆரம்ப கட்ட பயிற்சிகள் பெற்றுக் கொண்டதாகவும் அவர் பொலிஸாரிடம் விசாரணையின் போது ஒத்துக் கொண்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க