உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு 24இல் விசாரணை

போர் காலத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றம் ஒன்றுக்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வவுனியா மேல்நீதிமன்றில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதியன்று முல்லைத்தீவு புதுகுடியிருப்பில் தமது காவலில் இருந்த 8 இராணுவ அதிகாரிகள், 26 பாதுகாப்பு படை உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை 2010ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வந்தநிலையில் தற்போதே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க