விளையாட்டு செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இடைநிறுத்தம்!

உலகக் கிண்ண தொடரின் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் ஓல்ட் ட்ராஃபோர்ட், மன்செஸ்டர் மைதானத்தின் இன்று நடைபெற்ற இந்தப் போட்டி சற்றுமுன்னர் இடைநிறுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி போட்டி இடைநிறுத்தப்படும் வரை 46.4 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், ரோஹித் சர்மா 140 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் லோகேஸ் ராகுல் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் அமிர் இரண்டு விக்கெட்டுகளையும் ஹசன் அலி, வஹாப் ரைஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கருத்து தெரிவிக்க