உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

வவுனியாவில் கடின பந்து பயிற்சி திடல் மற்றும் அலுவலகம்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் வவுனியா ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கான கடின பந்து பயிற்சி திடல் மற்றும் அலுவலகம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய விளையாட்டு கழகத்தின் தலைவர் யுவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

கம்பரலிய திட்டத்தின் கீழ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் 6 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இவை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க