உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என்கிறார் கரு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. ஊடகத்துக்கு வழங்கிய விஷேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தன்னிடம் இது குறித்து யாரும் கலந்துரையாடவில்லை எனவும் அவ்வாறு கலந்துரையாடும் பட்சத்தில் அது குறித்து சிந்திக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சி தலைமையகத்தால் இது குறித்து பிரேரிக்கப்படவில்லை என்றும் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க