விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்-சிறப்பாக ஆடும் இந்தியா

உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் நாணயசுழட்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஓட்ட எண்ணிக்கை சீராக உயர்ந்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தனது அரைசதத்தை பதிவு செய்தார். லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்த நிலையில் அணித்தலைவர் கோலி களமிறங்கி உள்ளார்.

இந்நிலையில் இந்திய அணி 28 ஓவர் முடிவில் ஒரு விக்கட்டை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க