வடக்கு செய்திகள்

கற்சிலைமடுவில் வாகன விபத்து-இருவர் காயம்

முல்லைத்தீவு-ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடுப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்

புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற பாரவூர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிக்குள் தடம் புரண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 . 15 மணி அளவில் கற்சிலைமடு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பாரவூர்தியில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகி ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்

சம்பவ இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க