கிழக்கு செய்திகள்

புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்கு அளிக்கப்பட்டது

புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைத்தலும், யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று போரதீவுப்பற்றில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சுவட்டை புளியடி வீதி கம்பரெலிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நேற்று மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் அப்பிரதேசத்திற்குட்பட்ட 3 தையல் பயிற்சி நிலையங்களில் 6 மாத காலம் தையல் பயிற்சியை நிறைவு செய்த 48 யுவதிகளுக்கும் இதன்போது தையல் இயந்திரங்கள் வெல்லாவெளி கலாசார நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி, பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் வ.கண்னண் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க