வடக்கு செய்திகள்

பேராறு பகுதியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் பேராறு கிராம அலுவலர் பிரிவு பகுதியில் காணப்படுகின்ற பேராற்றில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த இடத்தில் எந்தவித அனுமதியும் இன்றி மணல் அகழப்படுகின்றது .ஆற்றங்கரையிலே மணலை குவித்து வைத்து விட்டு இரவு வேளையிலேயே சட்டவிரோதமாக வாகனங்களில் ஏற்றி வெளி இடங்களுக்கு கொண்டு செல்வதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

இருப்பினும் குறித்த நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு திணைக்கள அதிகாரிகளோ அல்லது பொலிசாரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை பொலிசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தங்களுடைய இயற்கை வளங்களை பாதுகாக்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க