உள்நாட்டு செய்திகள்

ஹொரணையில் கொள்ளையிட சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு

ஹொரணை நிதி நிறுவனத்துக்குள் நுழைய முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணந்துரை வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் இன்று ஒருவர் கொள்ளையிட வந்த நிலையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் சந்தேக நபரை தேடிய பொழுதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பொகுனுவிட பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் பாதுகாப்பில் ஹொரனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதேவேளை சந்தேக நபரிடம் இருந்த துப்பாக்கியை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய போது, அது போலி துப்பாக்கி என தெரியிவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க