வடக்கு செய்திகள்

மன்னாரில் பொசொன் பௌர்ணமி நிகழ்வு

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) பொசொன் பௌர்ணமி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதனையொட்டி விசேட அன்னதான சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் விகாரைகள் மற்றும் கோயில்களில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று காலை மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கினர்.

கருத்து தெரிவிக்க