உள்நாட்டு செய்திகள்புதியவை

ஐஸ் போதைப்பொருள் பையை விழுங்கியவர் உயிரிழப்பு :

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி – நாகஹமுல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை 15ஆம் திகதி குறித்த சந்தேக நபர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கைது செய்ய முன்னர் அவரிடம் இருந்த ஐஸ் போதைப்பொருள் பை ஒன்றை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க