உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியையும் ஏமாற்றிய ஹிஸ்புல்லா: தகவல் வெளியிட்டார் ஸ்ரீநேசன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா சாதுரியமாக ஏமாற்றியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை 15ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“பயங்கரவாதி சஹரான் ஜனாதிபதியின் ஆதரவாளராகத்தான் செயற்பட்டவர் என்றும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாளராக செற்பட்டதாக ஹிஸ்புல்லா நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.” இந்தக் கருத்தை வைத்தே நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லா கட்சித் தாவலிலேயே ஈடுபட்டு வருகின்றார். குறுகிய காலக்கட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களையும் ஏமாற்றும் செயற்பாட்டையே அவர் செய்து வருகிறார் என்றும் ஸ்ரீநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க