உள்நாட்டு செய்திகள்புதியவை

விபத்துக்களால் பாதிக்கப்படுவோருக்கு அரசு வழங்கும் நற்செய்தி!

வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் குடும்பத்துக்கும் அங்கவீனமாவர்களுக்கும் வழங்கப்படும் தொகையை அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில்விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விபத்துக்களில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, காப்புறுதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபைக்கு வழங்கும் நூற்றுக்கு ஒரு சதவீதமான நிதியை, நூற்றுக்கு இரண்டு சதவீதமாக அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க