உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக 10 வருட வீசா வசதி

நீண்ட கால வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வதிவிட வீசாக்களை 10வருடங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி முதலீட்டாளர் ஒருவர் ஐந்து வருட வீசாவை பெற்றுக்கொள்வதற்காக 300.000 டொலர்களை வைப்புசெய்யவேண்டும்.

எனினும் புதிய நடைமுறையின்படி 10 வருட வீசாவுக்காக முதலீட்டாளர் ஒருவர் 500.000 டொலர்களை வைப்புச்செய்யவேண்டும்.

இந்தநிலையில் இது தொடர்பில் இந்த வாரத்தில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க