வெளிநாட்டு செய்திகள்

நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த கெர்மடக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7 .4 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து கடல் அலைகள் கொந்தளித்தன.

இதையடுத்து அவசரகால சிவில் மேலாண்மை நிர்வாகம் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தது. கடற்கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

எனினும் எட்டு நிமிடங்கலின் பின்னர் எந்த பெரிய உயிர்ச்சேதமும் பாதிப்பும் இல்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க