உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு நேரடி தொடர்பில்லை

ஐ.எஸ். அமைப்பு மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு நேரடியாக தொடர்புபடவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடாத புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த தீவிரவாதத் தாக்குதலானது முழுக்க முழுக்க உள்நாட்டு தீவிரவாதிகளாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
ஐ.எஸ். அமைப்பினால் வெளியிடப்பட்ட இலங்கை குண்டுதாரிகளின் காட்சிகள் அடங்கிய வீடியோவை இந்தோனேசியாவிலுள்ள ஐ.எஸ். அமைப்பிற்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளதென அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று சில நாட்களுக்கு பின்னர் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல் பக்தாதி இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளார்.
எனினும் குறித்த உள்நாட்டு தீவிரவாத வலையமைப்பானது ஐ.எஸ். பக்தாதியின் தலைமையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென இவர்களில் சிலருக்கு ஐ.எஸ். அமைப்பிலுள்ள சிலருடன் தொடர்புகள் மாத்திரம் இருந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லவெனவும் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க